இவ்வசதி பெண் காவலர்கள் சென்னை மாநகருக்கு பணியிட மாறுதல் பெற்று வரும் போதெல்லாம், அவர்களுக்கு அரசு குடியிருப்புகள் கிடைக்கும் வரை அல்லது சொந்தமாக வாடகைக்கு தங்கும் விடுதியை ஏற்பாடு செய்யும் வரை தங்கும் இடமாக பயன்படுத்தப்படும் என்று காவல்துறை மானியக் கோரிக்கையின்போது பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் வகையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 200 பெண் காவலர்கள் தங்கும் வகையில் மகளிர் காவலர் விடுதி அமைத்திட ரூ.9 கோடியே 73 லட்சத்து 24 ஆயிரம் வழங்குவதற்கு தற்போது நிர்வாக ஒப்பளிப்பு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், சென்னை மாநகருக்கு பணியிட மாறுதலில் வரும் பெண் காவலர்களுக்கு இம்மகளிர் காவலர் விடுதி பேருதவியாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post சிந்தாதிரிப்பேட்டையில் 200 பெண் காவலர்கள் தங்கும் வகையில் மகளிர் காவலர் விடுதி அமைத்திட ரூ.9.73 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.