சிவராமப்பா சுதாகரிக்கும் முன்பாக, அவர் முகத்தின் மீது மிளகாய் பொடியை தூவிய கும்பல், காரில் இருந்து இழுத்து வெளியே சாலையில் போட்டு, அரிவாளால் சராமாரியாக வெட்டினர். இதில் சிவராமப்பா உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் டூவீலரில் தப்பிச்சென்றது. இதுகுறித்தும் சிப்காட் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டனர். சிவராமப்பாவிற்கும், அவருடைய உறவினர்களுக்கும் சொத்து பிரச்னை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. இந்த பிரச்னையில் உறவினர்கள் கூலிப்படையை ஏவி, சிவராமப்பாவை கொலை செய்தார்களா அல்லது வெறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மிளகாய் பொடி தூவி விவசாயி வெட்டிக்கொலை: முகமூடி கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.