செக் மோசடி வழக்கு இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு பிடிவாரண்ட்

மும்பை: திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு எதிரான செக் மோசடி வழக்கை விசாரித்த அந்தேரி நீதிமன்றம் ஜனவரி 21ம் தேதி 3மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் மனுதாரருக்கு ரூ.3.72லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராம்கோபால் வர்மா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 4ம் தேதி இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி ஏ.ஏ.குல்கர்னி, ராம்கோபால் வர்மா நீதிமன்றத்தில் ஆஜராகததால் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரும் அவரது மனுவை நிராகரித்ததோடு, ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

The post செக் மோசடி வழக்கு இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு பிடிவாரண்ட் appeared first on Dinakaran.

Related Stories: