சென்னை: சென்னை கே.கே.நகர் அய்யாவுபுரத்தில் தகராறில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஜெயராமன் வீட்டின் முன்பு பாஜக கொடிக் கம்பம் அமைக்க ராமலிங்கம் முயன்றுள்ளார். தனது வீட்டின் முன்பு வைத்திருந்த கொடிக் கம்பத்துக்கான இரும்பு குழாயை ஜெயராமன் அகற்றியுள்ளார். கொடிக் கம்ப குழாயை அகற்றிய ஜெயராமனுடன் தகராறில் ஈடுபட்டு ஜாதி பெயரை கூறி தரக்குறைவாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
The post சென்னையில் தகராறில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு..!! appeared first on Dinakaran.