4ம் நாளில் விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் கடந்த ஆக.5ம் தேதி நுழைந்தது, முதல் சுற்றை முடித்து கடந்த 6ம் தேதி அடுத்து சுற்றுவட்டபாதையில் இறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் விண்கலத்தின் நிலவு சுற்றுவட்ட பாதை மேலும் குறைக்கப்பட்டது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு: நிலவின் மேற்பரப்பை மேலும் நெருங்கியுள்ளோம், சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை 174 கி.மீ. x 1437கி.மீ. தூரத்திற்கு குறைக்கப்பட்டது. அடுத்த சுற்றுபாதை குறைக்கும் பணிகள் வரும் 14ம் தேதி மதியம் 11.30 மணி மற்றும் 12.30 மணிக்கு இடையே நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சந்திரயான் – 3 விண்கலத்தின் நிலவு சுற்றுவட்ட பாதை மேலும் குறைப்பு: இஸ்ரோ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.