இந்த வருடம் பொங்கல் திருநாளுக்கு 12, 13ம் தேதிகளில் மட்டும் 4.44 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் காரணமாகவே நேற்று முன்தினம் தங்கள் ஊர்களுக்கு செல்ல இருந்த பயணிகளுக்கு சற்று காலதாமதம் ஏற்பட்டது. மொத்தமாக 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். இச்சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை கண்காணித்திட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுகளுக்கு சென்று மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளை கொண்டாடிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், கடந்த 2 நாட்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் பார்வையிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தக்க அறிவுரை வழங்கப்பட்டது.
The post இதுவரை இல்லாத அளவில் 2 நாளில் அதிகப்படியான பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.