மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் சரிவு..!!

மும்பை: உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் படிப்படியாக குறைந்து சரிவுடன் முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் சரிந்து 81.445 புள்ளிகளானது. காலையில் 275 புள்ளிகள் உயர்ந்திருந்த சென்செக்ஸ், படிப்படியாக சரிந்து 139 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் 30 நிறுவனங்களில் 20 நிறுவனப் பங்குகள் விலை குறைந்து வர்த்தகம் ஆகியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 41 புள்ளிகள் குறைந்து 24,812 புள்ளிகளானது. தேசியப் பங்குச் சந்தையில் 2,955 நிறுவனகளில் 1,851 நிறுவன பங்குகள் விலை குறைந்து முடிந்தன. 1,026 நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகம்; 78 நிறுவன பங்குகள் விலை மாற்றமின்றி முடிந்தன.

The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் சரிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: