The post கட்சி பொறுப்பிலிருந்து பாஜ மாநில செயலாளர் சரவணகுமரன் விடுவிப்பு: அண்ணாமலை அறிவிப்பு appeared first on Dinakaran.
கட்சி பொறுப்பிலிருந்து பாஜ மாநில செயலாளர் சரவணகுமரன் விடுவிப்பு: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு பாஜ மாநில செயலாளராக பதவி வகித்து வந்த சரவணகுமரன், அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பாஜ கட்சியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமரன் தான் வகித்து வந்த மாநில செயலாளர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார். இதுதொடர்பாக கட்சியின் தலைமைக்கு கடிதம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவருடன் கலந்துரையாடிய பின், அவரது கோரிக்கையை ஏற்று அவர் தமிழ்நாடு பாஜ கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.