ம.பி பாஜ எம்எல்ஏ மகன் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

சிங்ராவ்லி

: மத்தியப்பிரதேசத்தில் சிங்ராவ்லி சட்டமன்ற தொகுதி பாஜ எம்எல்ஏ ராம் லல்லு வைஷ்யா. இவரது மகன் விவேகானந்த். நேற்று முன்தினம் மாலை எம்எல்ஏ மகன் காரில் சென்றுகொண்டிருந்தார். குறுகிய சாலையில் கும்பல் நின்றிருந்த நிலையில் அவர்களுடன் விவேகானந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் விவேகானந்த் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதில் கைர்வார் என்பவர் காயமடைந்தார்.

The post ம.பி பாஜ எம்எல்ஏ மகன் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: