×

பாஜகவுக்கு அதிமுக கூட்டணிக்கான கதவுகள் சாத்தப்பட்டது.. முன் வைத்த காலை எப்போதும் பின் வைக்க மாட்டோம் : மாஜி அமைச்சர் ஜெயக்குமார்

தஞ்சை : பாஜகவுக்கு அதிமுக கூட்டணிக்கான கதவுகள் சாத்தப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தொடர்பாக தஒன்றிய அமைச்சர் அமித்ஷா சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில்,”அனைத்து கட்சிகளுக்குமே (அதிமுக உட்பட) கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அதிமுக கூட்டணி தொடர்பாகவும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம்,”எனத் தெரிவித்தார். அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ஜெயக்குமார்,”பா.ஜ.க. வேண்டுமானால் கூட்டணிக்கான கதவுகளை திறந்து வைத்திருக்கலாம். பா.ஜ.க.வுக்கு அதிமுக கூட்டணிக்கான கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ஜெயக்குமார்,”அதிமுகவைப் பொறுத்தவரை தொண்டர்கள் பாஜக கூட்டணியை விரும்பவில்லை.முன் வைத்த காலை எப்போதும் பின் வைக்க மாட்டோம்,”என்றார்.இதனிடையே கூட்டணி தொடர்பாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,”அதிமுக உடன் இதுவரைக்கும் மக்களவை தேர்தல் குறித்து பாஜக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை.மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பாஜக கூட்டணியில் இணையலாம்.இந்த மாத இறுதிக்குள் பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும்,” என்றும் கூறியுள்ளார்.

The post பாஜகவுக்கு அதிமுக கூட்டணிக்கான கதவுகள் சாத்தப்பட்டது.. முன் வைத்த காலை எப்போதும் பின் வைக்க மாட்டோம் : மாஜி அமைச்சர் ஜெயக்குமார் appeared first on Dinakaran.

Tags : AIADMK alliance ,BJP ,Former Minister ,Jayakumar ,Thanjavur ,Former ,AIADMK ,minister ,Amit Shah ,Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED பாஜ-அதிமுக கூட்டணி பற்றி கேட்காதீங்க…எச்.ராஜா அலறல்