பாஜக பெற்ற வாக்கு எண்ணிக்கை குறித்து வேலுமணி தவறான தகவலை தந்துள்ளார். வேலுமணி தன்னுடைய அரசியல் அறிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கோயம்புத்தூர் மக்கள் அதிமுகவை முற்றிலும் நிராகரித்து விட்டனர். சந்தர்ப்பவாத அரசியல் செய்து வரும் அதிமுக தலைவர்களை மக்கள் நிராகரித்து விட்டனர் என்பது தான் தேர்தல் தரும் பாடம். ஆளும் கட்சியாக இருக்கும் போதே அதிமுக தனியாக போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. பாஜக மாநில தலைவராக நான் இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக மாநில தலைவராக வேறு ஒருவரை கொண்டு வந்தால் தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியும். அப்பாவி ஆட்டை வெட்ட வேண்டாம். கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள். நான் கோவையில்தான் இருக்கப் போகிறேன்,”இவ்வாறு பேசினார். தொடர்ந்து, கோவையில் வேட்பாளராக வாக்கு எண்ணும் மையத்திற்கு வராதது ஏன்?’ என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, “வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் பொதுமக்கள் இருக்கிறார்களா? மக்களை உள்ளே விடுகிறார்களா? மக்களை எங்கே சந்திக்க வேண்டுமோ அங்கே சந்திக்கிறேன்”என்றார்.
The post பாஜக மாநில தலைவராக நான் இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது : அண்ணாமலை திட்டவட்டம் appeared first on Dinakaran.