இதில், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்தராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து அனுமந்தராவ் கூறுகையில், ‘இன்று துவங்கிய எய்ம்ஸ் பணி 33 மாதங்களில் நிறைவடையும்’ என தெரிவித்தார். கண்துடைப்பு நாடகம் மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து தொடங்கியிருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு இடைவெளி என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும். மக்களவைத் தேர்தலுக்காகவே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துவங்குகிறது ஒன்றிய அரசு. பல திட்டங்களை துவக்கி வைப்பதற்காக 3 முறை தமிழ்நாடு வந்த பிரதமர், மதுரை எய்ம்ஸ் பணிகளை துவக்கி வைக்காததற்கான காரணம் என்ன? இது தேர்தல் நேர கண்துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.
The post அடிக்கல் நாட்டி 5 ஆண்டுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு பூமிபூஜை: தேர்தலுக்காக கண்துடைப்பு நாடகம் என எம்பி தாக்கு appeared first on Dinakaran.