அப்போது, பல்லி விழுந்த பாலை குழந்தை குடித்துள்ளது. குழந்தைக்கு எதாவது பிரச்னை வந்தால் ஓட்டல் நிர்வாகம்தான் பொறுப்பு என, வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டினர். அதற்கு ஓட்டல் நிர்வாகம் நாங்கள் பொறுப்பல்ல, உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ராம்ராஜ் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை அந்த ஓட்டலில் தீவிர ஆய்வு செய்து, பாலில் பல்லி கிடந்தது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, நோட்டீஸ் அளித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல ஓட்டலுக்கு நோட்டீஸ்: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.