குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடந்த 2 நாட்களாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதமான காலநிலை நிலவிய நிலையில், அதனை அனுபவித்த படியே சுற்றுலா தளங்களை சுற்றி பார்த்தனர். ஊட்டி ஏரியில் உள்ள படகு இல்லத்தில் இருந்து படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். இதனிடையே தொடர் விடுமுறையை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கடந்த 21ம் தேதி 10,600 பேரும், ஞாயிற்றுக்கிழமை 17 ஆயிரம் பேரும், ஆயுதபூஜை தினத்தன்று நேற்று 21 ஆயிரம் பேர் என 3 நாட்களில் மொத்தம் 48 ஆயிரத்து 600 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்திருந்தனர்.
The post ஆயுத பூஜை, தொடர் விடுமுறை; 48 ஆயிரம் பேர் ஊட்டி வருகை appeared first on Dinakaran.