சல்மான் ருஷ்டிக்கு விருது

நியூயார்க்: மும்பையில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பென் நூற்றாண்டு வீரத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்ட சல்மான் ருஷ்டி விருதை நேரில் பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த இலக்கிய கருத்தரங்கின்போது சல்மான் ருஷ்டி கத்தியால் சரமாரியாக தாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார். தற்போது விருது பெறுவதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

The post சல்மான் ருஷ்டிக்கு விருது appeared first on Dinakaran.

Related Stories: