ஏனென்றால் தனிமனித வளர்ச்சியை குடும்பம் தடுக்கும் என்று அவர் நம்பினார். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. இந்தியா ராணுவத்திலும் பொருளாதாரத்திலும் மட்டும் வலிமையாக இருந்தால் போதாது. இந்தியர் அனைவரும் ஒரே குடும்பமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும். ஏகாதிபத்தியத்தை நான் எதிர்க்கிறேன். ஆனால் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் இது ஒரு வரலாற்று தேவையாக மாறிப்போனது. ஆங்கிலேயர்கள் இந்தியாவின் சமூக கட்டமைப்பை சீர்குலைத்தார்கள், காரல் மார்க்ஸ் போன்றவர்கள் நம்முடைய அனைத்து வகையான உணர்ச்சிகளையும் வேதியியல் மாற்றம் என்று சொன்னார்கள்.
அவர்கள் கூறியது இன்று வரை பிரதிபலிக்கிறது. டார்வின் என்கின்ற ஒரு சிறந்த மனிதர் கூறினார், குரங்கிலிருந்து தான் மனிதர்கள் வந்தார்கள் என்று கூறினார். நாம் அனைவரும் பள்ளி, கல்லூரிகளில் என அனைத்திலும் டார்வின் கோட்பாட்டை படித்தோம், அனைவரும் அதை நம்புவதில்லை, ஆனால் சிலர் அதனை முழுமையாக நம்புகிறார்கள். இதன் வழியாக தான் புரட்சி ஏற்பட்டது என்றும் நாம் அனைவரும் குரங்கிலிருந்து தான் பரிணமித்தோம் என்பதையும் டார்வின் கூறினார். டார்வின் முதலாளித்துவத்தின் தார்மீகத்தை நியாயப்படுத்தினார்.தற்போதும் இந்தியாவில் குரங்கில் இருந்துதான் மனிதன் வந்தான் என்பது குறித்து நாம் விவாதித்து வருகிறோம், படித்து வருகிறோம். தேர்வுகளிலும் கேள்விகளாக கேட்கப்படுகிறது. இந்திய குடிமை பணி தேர்வுகளில் கூட இது குறித்த கேள்விகள் வருகிறது.
The post ராணுவம், பொருளாதாரத்தில் வலிமையாக இருந்தால் போதாது இந்தியர் அனைவரும் ஒரே குடும்பமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.