பின்னர் அலுவலகம் முழுவதும் துருவி துருவி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் சார்பதிவாளர் சக்திவேல் உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தனர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி வரை சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கு உரிய கணக்கு இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சார் பதிவாளர் சக்திவேலுக்கு டிஎஸ்பி இமயவரம்பன் உத்தரவிட்டு சென்றார்.
The post அரவக்குறிச்சி சார்பதிவாளர் ஆபீசில் விடிய விடிய நடந்த சோதனையில் ரூ.1.17 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.