செங்கல்பட்டு: அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள, காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என,செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு 683 ஓட்டுநர் உடன் நடத்துநர்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து 18.8.2023 அன்று என்ற www.arasubus.tn.gov.inஇணையதளம் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இப்பதவிக்கு 18.8.2023 மதியம் 1 மணி முதல் 18.9.2023 மதியம் 1 மணிவரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நியமனம் தொடர்பான அனைத்து விபரங்களும் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்திலேயே பதிவிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படை தன்மை உடையதாக இருக்கும் எனவும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் என்றும், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு (Practical) மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post போக்குவரத்து கழகங்களில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.