முன்னதாக, நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி கூறியதாவது: நிதி ஆயோக்கின் அறிக்கையின்படி 2015-16 மற்றும் 2019-21 ஆண்டுகளில் 135.5 மில்லியன் இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு மேலே வந்துள்ளனர். பிரதமரின் விக்க்ஷித் பாரத் கனவு திட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டு இருக்கிறது. அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் உழைக்கும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி என சுயசார்பு நாடாக இந்தியா வளர்ச்சி அடையும். இந்திய இளைஞர்கள் ஆபத்தான சூழ்நிலைகளைக் கண்டு பயப்படுவதில்லை என்பதை கண்டு பிரதமர் பெருமை கொள்கிறார்.
எங்கள் தலைமுறையில் அது குறைவாக இருந்தது. நம் நாட்டின் கலாச்சாரமும், குடும்பக் கட்டமைப்பும் நம்மை அதற்கு தயார்படுத்தியுள்ளது. மாநிலங்கள் விருப்பப்பட்டால் மாநில பல்கலைக்கழகங்களை மேம்படுத்த பயன்படுத்திக்கொள்ள 2022 முதல் 2025 வரையிலான ஆண்டுகளுக்கு ரூ.238 கோடி ஒதுக்கியுள்ளது. நிதி ஆயோக் மூலம் தேசிய தகவல் ஆய்வு மையத்தை உருவாக்கியுள்ளோம். இதனை மாநில உதவித் திட்டம் மூலம் மாநிலங்கள் பயன்படுத்திக்கொண்டு மாநில தகவல் ஆய்வு மையங்களை உருவாக்கவேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post அண்ணா பல்கலை 43வது பட்டமளிப்பு விழா 1,25,113 பேருக்கு பட்டம்: 1,550 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார் appeared first on Dinakaran.