இதையடுத்து ‘அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என கலெக்டர் மூலமாக அரசுக்கு கடிதம் அனுப்பினார். இந்த மனுவை விசாரித்த அரசு, வழக்கு பதிவு செய்வதற்கான காரணங்கள் இருக்கிறது. எனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாம்’ என அனுமதி வழங்கியது. இதையடுத்து இந்த வழக்கில் டிசம்பர் 2ம் தேதி சேலம் நீதிமன்றதில் ஆஜராகுமாறு பாஜ தலைவர் அண்ணாமலைக்கு கடந்த 6ம்தேதி சம்மன் அனுப்பப்பட்டது.
கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சம்மன் சென்றது. ஆனால் சம்மன் திரும்ப வந்துவிட்டது. இதுகுறித்து வழக்கு தொடர்ந்த பியூஸ் கூறுகையில், ‘நீதிமன்றத்தில் இருந்து சென்ற சம்மனை வாங்காமல் அண்ணாமலை திரும்ப அனுப்பிவிட்டதால் அவருக்கு பயம் வந்துவிட்டது. இதுகுறித்து வரும் 2ம்தேதி கோர்ட்டில் எனது வழக்கறிஞர் மூலமாக பிடிவாரண்ட் பெற நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.
The post இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சி கோர்ட் சம்மனை திருப்பி அனுப்பிய அண்ணாமலை appeared first on Dinakaran.