தொடர்ந்து நேற்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரையின்போது பட்டணம் ரோடு சாலையில் அண்ணாமலை நடந்து சென்றார். அப்போது பாஜகவினர் கூட்டமாக நின்றிருந்தனர். அந்தநேரத்தில் பாஜகவில் உறுப்பினராக இருக்கும் 40 வயது பெண் ஒருவர், அண்ணாமலையை பார்க்க ஆர்வத்துடன் கூட்டத்திற்குள் நுழைந்தார். அப்போது கூட்டத்தில் நின்றிருந்த ஒருவர் அந்த பெண்ணிடம் திடீரென சில்மிஷம் செய்துள்ளார்.
சுதாகரித்துக் கொண்ட அந்த பெண்மணி அந்த நபரை தாக்க முற்பட்டுள்ளார். ஆனால் சில்மிஷம் செய்தவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டார். அந்த பெண் கூறிய அடையாளங்களின் படி சில்மிஷத்தில் ஈடுபட்ட 50 வயது நபர் யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அண்ணாமலையின் பாதயாத்திரையில் பெரும் பரபரப்பு நிலவியது. கட்சியின் மாநில தலைவர் இருந்த கூட்டத்திலேயே பெண்ணிடம் சில்மிஷம் நடந்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
The post அண்ணாமலையின் பாதயாத்திரையில் பாஜ பெண் உறுப்பினரிடம் சில்மிஷம்: ராசிபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.