இதனிடையே தேவகோட்டையில் பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், அதிமுக கொடியை சட்டையாக கூட தைத்து போடுவோம், யாரும் கேள்விகேட்க முடியாது என்று பதிலடி கொடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், விசாரணையின் போது பழனிசாமிக்கு எதிராக கேள்விகளை கேட்கும் நீதிபதிகள், தீர்ப்பின்போது மட்டும் அவருக்கு தேவையான தீர்ப்பை வழங்கும் மர்மம் என்னவென்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார். மேலும் எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய கொடி, யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை என்றும் திருச்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
The post அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என ஈபிஎஸ் புகார்.. சட்டையாகக் கூட தைத்து போட்டுக் கொள்வோம் என ஓபிஎஸ் தரப்பு பதிலடி!! appeared first on Dinakaran.