தமிழகத்தில் அமைய உள்ள கூட்டணிகள், திராவிட இயக்கங்கள் தலைமையில் தான் இருக்கும். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் தான் கூட்டணி இருந்தது. எனவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க பாடுபடுவோம். அதிமுகவில் எங்களிடையே கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. தேர்தலில் சுமூகமாக செயல்பட்டு வெற்றி பெற பாடுபடுவோம். அதேப்போல் பாஜ உடன் எங்களுடைய கூட்டணி சுமூகமாக இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு திரும்பி வந்திருக்கிறார். பேச்சுவார்த்தை சுமூகமாக அமைந்துள்ளது.
The post அதிமுக எம்.பி தம்பிதுரை பேச்சு தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் தலைமையில்தான் கூட்டணி இருக்கும் appeared first on Dinakaran.