முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான மொய்தீன் உள்பட பல கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த மோசடியை கண்டித்தும், வங்கியில் முதலீடு செய்தவர்களின் பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியும் பாஜ சார்பில் முன்னாள் எம்பியும், நடிகருமான சுரேஷ் கோபி தலைமையில் நேற்று பாதயாத்திரை நடைபெற்றது. கருவன்னூர் கூட்டுறவு வங்கி முன்பிருந்து பாஜ மாநில தலைவர் சுரேந்திரன் இந்த பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்டு 18 கிமீ தொலைவிலுள்ள திருச்சூர் மாநகராட்சி அலுவலகம் வை இந்த பாதயாத்திரை நடைபெற்றது. இதில் ஏராளமான பாஜ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
The post கூட்டுறவு வங்கி மோசடியை கண்டித்து திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி பாதயாத்திரை appeared first on Dinakaran.