நீலகிரி: தனது விடா முயற்சியால் தண்ணீரில் சிக்கிய குட்டி யானை நீந்தி கரைக்கு வந்து உயிர் தப்பியது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி ஆற்றை கடக்க முயன்ற போது குட்டி யானை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு தனது விடா முயற்சியால் தண்ணீரில் நீந்தி மீண்டும் கரைக்கு வந்து உயிர் தப்பியது...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வரும் நிலையில்,ஓவேலி மரப்பாலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.இந்த நிலையில் ஓவேலி மரப்பாலம் ஆற்றங்கரை பகுதியில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகள் ஆற்றை கடக்க முயன்ற போது குட்டி யானை ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
கூட்டத்துடன் ஆற்றை கடக்க முயன்றபோது சிறிது தூரம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.ஆனாலும் விடாமுயற்ச்சியால் தண்ணீரில் மூழ்கியும்,நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெள்ளத்தில் நீந்தி கரைக்கு வந்து உயிர் தப்பியது.இந்த காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#Nilgiris #Elephant #Wildanimal #DinakaranNews
https://www.dinakaran.com
Facebook : https://www.facebook.com/dinakarannews
Twitter : https://twitter.com/dinakarannews
Instagram : //instagram.com/dinakarannews
App: https://goo.gl/h3Wrnh