திருமயம் அருகே பைக் மோதி சைக்கிளில் சென்ற வாலிபர் பலி

திருமயம். டிச.3: திருமயம் அருகே சைக்கிள் மீது பைக் மோதி விபத்து சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஊனையூர் கிராமத்தை சேர்ந்த வெள்ளைமணி மகன் குமார் (37). இவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை திருமயம் கடை வீதிக்கு வந்து பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு சைக்கிளில் குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் குமார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருமயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: