நாகர்கோவில், டிச.3: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கன்னியாகுமரி மாவட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஷேக் அலி தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நபில் அஹமத், பொருளாளர் நூருல் அமீன், துணைத் தலைவர் ஹியாஸுதீன், துணை செயலாளர் யாசர், செய்யது அகமது கரீம், முகம்மது ராபி, ஹுஸைன் ஜவாஹிரி, மருத்துவ அணி செயலாளர் அப்சல், மாணவர் அணி செயலாளர் முஸ்தபா, தொண்டர் அணி செயலாளர் நிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள புயல் எச்சரிக்கை சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. புரெவி புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் பாதிப்புகள் ஏற்பட்டால் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்கு மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட தொண்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டது.