சுசீந்திரம், டிச. 3 : ஆஸ்டின் எம்எல்ஏ மாவட்ட கலெக்டர் மற்றும் சிறப்பு அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘புரெவி’ புயல் 4ம் தேதி கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டம் முழுவதும் மழை பெய்யும். பெரு மழையின்போது அணைகளில் இருந்து அதிகமான தண்ணீரை திறந்து விடும் சூழல் ஏற்படும். அப்போது குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகலாம். மேலும் குளங்களில் உடைப்பு ஏற்படலாம். குறிப்பாக பழையாற்றின் கரையோரம் உள்ள நங்காண்டி, குக்கல்விளாகம், தெரிசனங்கோப்பு, திருப்பதிசாரம், நெசவாளர் காலனி, கீரிப்பாறை, ஆண்டித்தோப்பு, சுசீந்திரம், பரப்புவிளை, குத்துக்கல், நங்கை நகர், உதிரப்பட்டி, பாலகிருஷ்ணா நகர், இந்திரா காலனி, அரிய பெருமாள்விளை காலனி, குளத்துவிளை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து அப்பகுதி பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்படுவது வழக்கம்.