பரமக்குடி, டிச.2: பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த அமமுக உள்ளிட்ட மாற்று கட்சியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி முன்னிலை வகித்தார். இதில் முதுகுளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட எஸ்.காரைக்குடி, கொளுந்துரை, பிரபக்களூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்களும் - பெண்களும் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி காமன்கோட்டையைச் அனிதா முருகேசன், ஏற்பாட்டில் அதிமுகவில் இணைந்தனர்.