போக்சோவில் வாலிபர் கைது

ஆர்.எஸ்.மங்கலம், டிச.2: இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் அகிலன்(19). இவர் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள ஒரு இளம் பெண்ணை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் போச்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அகிலனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: