திருவில்லிபுத்தூர், நவ. 27: திருவில்லிபுத்தூரில் மின்மோட்டார் பழுதால் சுகாதார வளாகம் 9 மாதங்களாக பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் திறந்தவெளியில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.திருவில்லிபுத்தூர் 18வது வார்டு கீழ்பட்டி கடைசி தெருவில் பொது சுகாதார வளாகம் உள்ளது. இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இங்குள்ள போர்வெல்லில் தண்ணீர் இருந்தும் மின்மோட்டார் பழுதால் கடந்த 9 மாதங்களாக சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டி வைத்துள்ளனர். மின்மோட்டாரை பழுது நீக்கி சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென இப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் திறந்தவெளி கழிப்பறைக்கு செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.