விருதுநகர், நவ. 27: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களிடையே வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சுயதொழில் ஊக்குவிப்பு முகாம், ஆலோசனைகள் நடைபெறவுள்ளது.இதையொட்டி நவ.30ம் தேதி வத்ராப் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், டிச.3ல் வில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், டிச.8ல் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், டிச.11ல் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், டிச.15ல் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் டிச.18ல் விருதுநகர் மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், டிச.22ல் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், டிச.26ல் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், டிச.31ல் சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சுயதொழில் ஊக்குவிப்பு முகாம்- ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே படித்துவிட்டு வேலையின்றி உள்ள மற்றும் சுயமாக தொழில் செய்து சாதிக்க துடிக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் நடக்க உள்ள தொழில் ஊக்குவிப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.