ஈத்தாமொழி, நவ.27: நாகர்கோவில் அருகே பாம்பன்விளையில் முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பியதால் பைக்கில் வந்த கல்லூரி மாணவர் நிலைதடுமாறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளிச்சந்தை அருகே உள்ள உன்னங்குளம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகன் சத்திய சுதாகர்(21). நாகர்கோவில் அருகே ஒரு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். பாம்பன்விளை அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பியதால், இவரது பைக் நிலைதடுமாறி லாரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சத்திய சுதாகர் படுகாயமடைந்தார்.