போடி, நவ. 25: போடி 10வது வார்டில் உள்ள ரேஷன் கடையில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் செய்வதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், கூலித்தொழிலாளர்கள் தங்களது வேலையை கெடுத்து பொருட்கள் வாங்க வேண்டிய அவலம் உள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கடந்த சில மாதங்களுக்கு முன் பயோமெட்ரிக் முறையை அரசு அமல்படுத்தியது. இதில், பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு கைரேகை பதிவாகாமல் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். இம்முறைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பழைய முறையிலேயே பொருட்கள் வழங்க கோரிக்கை விடுத்தனர். இதையேற்று பழைய முறையிலேயே ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டது.