அமைச்சர் கமலக்கண்ணன் தகவல் பேரிடர் பாதுகாப்பு மையமாக செயல்படுத்த நாகூர் தர்காவை 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டும்

நாகை, நவ.24: நிவர் புயல் பேரிடர் எச்சரிக்கை காரணமாக நாகூர் தர்காவை 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டும் என்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. நாகூர் மக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், தற்சமயம் நிவர் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் மிகப்பெரிய பேரிடர் பாதுகாப்பு மையமாக நாகூர் தர்கா உள்ளது. பேரிடர் காலங்களில் நாகூர் தர்கா 24 மணி நேரமும் திறக்கப்பட்டு அனைத்து சமூக மக்களின் பாதுகாப்பு மையாக இருக்கும். எனவே தற்சமயம் நிவர் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாகூர் தர்காவை 24 மணி நேரமும் திறந்து வைத்து பேரிடர் பாதுகாப்பு மையமாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: