வத்திராயிருப்பு, நவ. 24: வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பிளவக்கல் என்ற இடத்தில் பெரியாறு கோவிலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது கடந்த 5ம் தேதி பெரியாறு அணை விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த அணைகளுக்கு பாத்தியப்பட்ட 40 கண்மாய்கள் வத்திராயிருப்பு, பெரியகுளம், விராகசமுத்திரம் உள்ளிட்ட 13 மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் சென்று முழுகொள்ளளவை எட்டும் நிலையில் மற்ற கண்மாய்களான சுந்தரபாண்டியம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுந்தரபாண்டியத்தில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் நிலவரங்களை பார்வையிட்டு நத்தம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விட்டனர்.