தென்னை மரம் ஏறும் தொழிலாளி சாவு

உத்தமபாளையம், நவ.24: ராயப்பன்பட்டி அருகே தென்னை மரம் ஏறும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். கம்பம் அருகே சாமா ண்டிபுரத்தை சேர்ந்தவர் அண்ணாத்துரை மகன் கோட்டையன்(33). தென்னைமரம் ஏறும் தொழிலாளி. நேற்று ஆனைமலையன் பட்டியில் உள்ள தனியார் தென்னந்தோப்பிற்கு வேலைக்கு வந்தார். தென்னை மரம் ஏற முயன்றபோது திடீர் என நெஞ்சை பிடித்து வலிப்பதாக கூறி உள்ளார். உடனடியாக மற்ற தொழிலாளர்கள், உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் கோட்டையன் பரிதாபமாக இறந்தார். இது குறிதது ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: