புதுச்சேரி, நவ. 24: புதுச்சேரி ஜிப்மரில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகளுக்கான வெளிப்புற சிகிச்சை பிரிவு டிச.1ம் தேதி முதல் துவங்கப்படுகிறது. இது தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் நுரையீரல் மருத்துவ துறைகள் இணைந்து கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகளுக்கான வெளிப்புற சிகிச்சை பிரிவு சேவையை டிசம்பர் 1ம் தேதி முதல் தொடங்குகின்றன. கோவிட் நோய் தொற்றிலிருந்து மீண்ட பிறகு உடல் வலி, நெஞ்சு வலி அல்லது மூச்சு திணறல் போன்ற மருத்துவ பிரச்னைகள் உள்ள நோயாளிகள் மருத்துவ தொலைதொடர்பு மூலம் மருத்துவரின் சந்திப்பை 63844 04071 என்ற தொலைபேசியில் செவ்வாய் மற்றும் புதன் காலை 9 மணி முதல் மதியம் 4.30 மணி வரை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.