ஓசூர், நவ.23:ஓசூர் பகுதிகளில் ரோஜா மலர்களை குளிர்கால நோய்கள் தாக்கி உற்பத்தி குறைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஓசூர் பகுதியில் பசுமைகுடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம், சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட வகைகளில் ரோஜாமலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் ரோஜாமலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர்தினம் உள்ளிட்ட விழாக்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.