திருமயம், நவ.23: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ஏம்பலில் இருந்து மித்ராவயல் வழியாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு செல்லும் சாலை அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டது. சாலை புதுப்பிக்கும்போது சாலை பக்கவாட்டில் சாலையோரம் இருந்த மணலை பொக்லைன் இயந்திரம் கொண்டு அணைக்கப்பட்டது. அப்பகுதி உள்ள மணல் களியாக இருப்பதால் புதுப்பிக்கப்பட்ட மித்திராவயல் சாலையில் ஒரே நேரத்தில் இருண்டு வாகனங்கள் எதிரெதிரே வரும் போது ஒரு வாகனம் கண்டிப்பாக சாலையைவிட்டு சற்று கீழே இறங்கி வழிவிட வேண்டி உள்ளது.