சீர்காழி, நவ. 23: பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க சமுதாய கூடம், பள்ளிக்கூடங்களை தேர்வு செய்ய வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பேரிடர் காலங்களில் பொது மக்களை பாதுகாக்க எவ்வாறு செயல்படுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணி தலைமை வைத்தார். வேளாண்மை துறை இணை இயக்குனர் சுப்பையா, வருவாய் கோட்ட நேர்முக உதவியாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் ஹரிதரன் வரவேற்றார்.