தேனி, நவ. 22: தமிழ் கடவுளான முருகனுக்கு ஏற்ற மாதமாக கார்த்திகை மாதம் கொண்டாடப்படுகிறது . ஐப்பசி மாதம் 30ம் நாள் தொடங்கி கார்த்திகை மாதம் ஆறாம் நாள் வரை கந்தசஷ்டி திருவிழா சூரசம்காரம் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் உள்ளிட்ட விழாக்கள் முருகன் கோயில்களில் நடத்தப்படுவது வழக்கம். தேனி நகர் மதுரை ரோட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை சூரசம்ஹாரவிழா நடந்தது. இதில் முருகன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.