கோவில்பட்டி, நவ. 21: கோவில்பட்டி நகராட்சி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஓடை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வெள்ள நீர் விரைந்து வழிந்தோட நகராட்சி மூலம் செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் கடந்த 18ம்தேதி இரவு விடிய விடிய மழை பெய்தது. இதனால், இளையரசனேந்தல் ரோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே ஓடை பகுதியில் மழை காரணமாக அதிகளவு வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சாலையில் சுமார் ஒரு அடி அளவுக்கு மேலாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வழியாக சாலையில் சென்ற வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.