ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை

ராஜபாளையம், நவ. 12: ராஜபாளையம் முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (50). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். சில மாதங்களாக சுந்தர்ராஜ் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார் இந்நிலையில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் பின்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி நேற்று தீ வைத்துக் கொண்டார். அருகிலிருந்தவர்கள் இவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: