விஸ்வநாதபேரியில் சோலார் தெரு விளக்குகள் துவக்க விழா

சிவகிரி, நவ. 10: வாசுதேவநல்லூர் தொகுதி விஸ்வநாதப்பேரியில் 10 இடங்களில் சோலார் தெருவிளக்குகள் ரூ.4.60 லட்சத்தில் அமைக்கப்பட்டிருப்பதை மனோகரன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சி நிர்வாக அலுவலர் வெங்கடகோபு, விஸ்வநாதப்பேரி ஊராட்சி செயலாளர் உமாமகேஸ்வரி, சிவகிரி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் நவராஜ்,செல்லப்பன், (சோலார்) தினேஷ், ராயகிரி பேரூர் அதிமுக செயலாளர்  சேவுகப்பாண்டியன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் இளங்கோ, ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் சுமன், அதிமுக நிர்வாகிகள் ரமேஷ், நல்லையன், கந்தையா, திருமலையாண்டி, கணேசன், பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: