பாபநாசம், நவ.9: பாபநாசம் அருகே அம்மாப் பேட்டை வட்டார அட்மாத் திட்டம் சார்பில் 50 விவசாயிகளுக்கு பூ மற்றும் காய்கறி சாகுபடி குறித்த நேரடி கல்விச் சுற்றுலா பயிற்சி பாபநாசம் அடுத்த சுவாமிமலை இதன்சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைப் பெற்றது. இதில் அருந்தவபுரம், சூழியக்கோட்டை , இடையிருப்பு, ஒன்பத்து வேலி உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 50 விவசாயிகள் பங்கேற்றனர்.