உளுந்தூர்பேட்டை, நவ. 9: உளுந்தூர்பேட்டை அரசு பள்ளி மைதானத்தில் விடுமுறை நாளில் விளையாடிய மாணவர்களை தலைமை ஆசிரியர் வெளியேற்றியதால் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுமுறை நாளான நேற்று காலை மைதானத்தில் மாணவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தலைமையாசிரியர் ராமச்சந்திரன் மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் அரசுப்பள்ளி எதிரில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.