கிருஷ்ணகிரி, அக்.30: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜ கட்சி தலைவர் நாகராஜ் மற்றும் எஸ்.சி.,பிரிவு மாவட்ட தலைவர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் நேற்று அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமரின் படத்தை வைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை அனைத்து அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்த வேண்டும் என கடந்த 13ம் தேதி தமிழக பா.ஜ மாநில பட்டியல் அணி தலைவர் பாலகணபதி தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.