அரசு ஆபிசுகளில் பிரதமர் படம்; பாஜவினர் மனு

கிருஷ்ணகிரி, அக்.30: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜ கட்சி தலைவர் நாகராஜ் மற்றும் எஸ்.சி.,பிரிவு மாவட்ட தலைவர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் நேற்று அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமரின் படத்தை வைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை அனைத்து அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்த வேண்டும் என கடந்த 13ம் தேதி தமிழக பா.ஜ மாநில பட்டியல் அணி தலைவர் பாலகணபதி தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் அடிப்படையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் மோடியின் படத்தை வரக்கூடிய இரு வேலை நாட்களுக்குள் வைத்து தமிழக அரசின் அரசாணையை, முழுமையாக செயல்படுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது மாவட்ட பார்வையாளர் ஹரி கோட்டீஸ்வரன், பொது செயலாளர் சீனிவாசலு, வேப்பனஹள்ளி தொகுதி பொறுப்பாளர் அன்பரசன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாச கவுடா, நிர்வாகிகள் கிரண்ரெட்டி, மல்லப்பா, சீத்தப்பா, சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: