தேனி. அக். 28: இந்திய - திபெத் எல்லை போலீஸ் பாதுகாப்பு படையினர், தேனி போலீசாருக்கு, ஆற்றுயை கடக்கும் பயிற்சி அளித்தனர். தேனி அருகே உள்ள முல்லைப் பெரியாற்றில், இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த போலீசாருக்கு ஆற்றை கடக்கும் பயிற்சி உள்பட இயற்கை பேரிடர் பயிற்சிகளை நேற்று அளித்தனர். இப்பயிற்சி இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படை கமாண்டோ சஞ்சித் சிங் தலைமை வகித்தார். இதில் 90 வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.