புதிதாக 26 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை, அக். 22: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளர் எண்ணிக்கை 10,327 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்த 55 பேர் வீடு திரும்பினர். உயிரிழப்பு ஏதுமில்லை என்பதால் மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 147 ஆகத் தொடர்கிறது.இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 321 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: